“அது வேற தண்ணியில இருக்காதுடா” என்றார்.
“அப்ப வாப்பா கொண்டுபோய் கொளத்துல விட்றலாம்” என்றான் சிறுவன்.
அவர் சிறுவனை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு குளத்துக்கு கிளம்பினார். புட்டி சிறுவன் கையில் இருந்தது.
இப்போது மீன்கள் கஷ்டப்பட்டன. கண்கள் மூடிக் கொண்டன. அவைகளால் வெளியே பார்க்க முடியவில்லை.
குளத்தை அடைந்ததும், சிறுவன் மீன்களை குளத்தில் விட்டான்.
குளத்தில் விழுந்த சிறிது நேரத்தில் மீன்கள் குணமாயின.
மீன்கள் தவளையிடம் நடந்ததை சொன்னன.
அதற்கு தவளை “நமக்கான இடத்திலதான் நாம சந்தோசமா வாழ முடியும்” என்றது.
மீன்கள் ஆமாம் என்று தலை ஆட்டிவிட்டு வேகமாக குழத்திற்குள் மூழ்கி விளையாடின.