ஒரு குளத்தில், ஒரு தவளையும் சில மீன்களும் நண்பர்கள்.
ஒரு நாள் தவளை பாறையின் மீது உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது தவளையின் நண்பன் மீன், “எனக்கும் உன்ன மாதிரி வெளி உலக பாக்க ஆசை. எனக்கு உதவுறியா” என தவளையிடம் கேட்டது.
“சரி நான் யோசிச்சி சொல்றேன்” என்றது தவளை.
மறுநாள் காலையில் தவளை மீனிடம், “இந்த குளத்துக்கு தினம் நிறைய பேர் தண்ணி எடுக்க வருவாங்க. அப்ப நீ ஏதாவது ஒரு வாளில குதிச்சிடு. அப்படியே நீ அவங்க வீட்டுக்கு போயிடலாம்” என்றது.
மீன் ஆர்வமாகக் கேட்டது.
“நான் சரியான நேரத்துல உனக்கு சைகை கொடுப்பேன். நீ அப்ப குதிச்சிடு” என்றது தவளை.