மதிய நேரத்தில் சில பெண்கள் அந்த குளத்திற்கு தண்ணீர் எடுக்க வந்தார்கள்.
அப்போது ஒரு பெண் வாளியில் தண்ணீர் எடுக்கும்-போது தவளை “குதி” என்றதும், மீன் வாளியில் குதித்தது. அதோடு சேர்ந்து மற்றொரு மீனும் குதித்தது.
“நீ எதுக்கு குதிச்ச” என்று முதல் மீன் கேட்டது.
“எனக்கும் வெளி உலக பாக்க ஆசையா இருக்கு” என்றது அந்த மீன்.
அந்தப் பெண் வீட்டுக்கு போனதும், வாளியை ஓரத்தில் வைத்து-விட்டு உள்ளே சென்றாள்.
மாலையில் பள்ளி முடிந்து இரண்டு சிறுவர்கள் அந்த வீட்டினுள் ஓடி வந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் அந்த வாளியில் ஏதோ ஆடுவதைக் கண்டு அருகில் சென்றான்.
“அய்யா மீன்” என்று கத்திவிட்டு, வேகமாக உள்ளே ஓடினான்.
சிறிது நேரத்தில் ஒரு புட்டியுடன் வந்தான். அதில் நீர் ஊற்றி இரண்டு மீன்களையும் பிடித்து அதனுள் போட்டான். கொஞ்ச நேரம் அவைகளுடன் பேசி விளையாடினான்.
* புட்டி = பாட்டில்/குடுவை